Baca Surah Najmdengan terjemahan
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
Fakana qaba qawsayni aw adna
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
Faawha ila AAabdihi ma awha
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
Ma kathaba alfuadu ma raa
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Afatumaroonahu AAala ma yara
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
Walaqad raahu nazlatan okhra
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
AAinda sidrati almuntaha
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
AAindaha jannatu almawa
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
Ith yaghsha alssidrata ma yaghsha
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
Ma zagha albasaru wama tagha
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
Contact Us
Thanks for reaching out.
We'll get back to you soon.